இதய சிகிச்சையில் புதிய புரட்சி- திருச்சியில் ‘ஸ்டென்ட் இல்லாத’ ஆஞ்சியோபிளாஸ்டி சாதனை
திருச்சி 31.03.2026

*இதய சிகிச்சையில் புதிய புரட்சி- திருச்சியில் ‘ஸ்டென்ட் இல்லாத’ ஆஞ்சியோபிளாஸ்டி சாதனை*
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிக்கலான இதய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்த 73 வயது மூதாட்டிக்கு, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்து உயிர் காத்துள்ளனர்.
நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கொண்ட அந்த நோயாளிக்கு, இதயத் தமனிகளில் அதிகப்படியான கால்சியம் படிவுகள் (Calcific Triple Vessel Disease) இருந்தன. வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சை அவருக்குச் சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில், இதய நோயாளி நிபுணர் டாக்டர் முகமது காசிம் மற்றும் குழுவினர் இணைந்து இந்த நுணுக்கமான சிகிச்சையைச் செய்தனர்:
ரோட்டா பர் (Rota Burr) வைரத் துகள்கள் கொண்ட கருவி மூலம் தமனிகளில் இருந்த கடினமான கால்சியம் படிவுகள் அகற்றப்பட்டன.
ரத்த நாளங்களின் உட்புறத்தை மிகத் துல்லியமாக ஆராய நவீன ஸ்கேன் பயன்படுத்தப்பட்டது.
நிரந்தர உலோக ஸ்டென்ட்களுக்குப் பதிலாக, மருந்து பூசப்பட்ட சிறப்பு பலூன்களை (Drug Coated Balloons) பயன்படுத்தி ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
இந்தச் சிகிச்சையின் மூலம் ரத்த நாளத்தின் உட்புற அளவு 90% அதிகரித்தது. நோயாளி விரைவாகக் குணமடைந்து 48 மணி நேரத்திலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அறுவை சிகிச்சை செய்ய முடியாத அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு, இமேஜிங் மற்றும் அதெரெக்டோமி கருவிகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஒரு வரப்பிரசாதம்.”
(டாக்டர் முகமது காசிம், இதய நோய் நிபுணர்.)
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த இதயச் சிகிச்சையைச் சாத்தியமாக்கிய ப்ரண்ட்லைன் மருத்துவமனை குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.