முரசொலி மாறனின் நினைவு நாள்-அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி 23.11.2025

*முரசொலி மாறனின் 22-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை*
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 22-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் முரசொலி மாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.