திருச்சி..
பேராசிரியர் அன்பழகன் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை..
பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா, இளங்கோ, உள்ளிட்ட மண்டல குழு தலைவர் துர்கா தேவி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா,மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி என திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…