திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஒரு கிராம பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு! கலெக்டரிடம் நடவடிக்கை கோரி மனு!
திருச்சி மணச்சநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு கிராம பொது மக்களை மட்டும் அனுமதிக்காததை கண்டித்து அம்மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.
திருச்சி தெற்கியூர் கிராம வளத்தாயி அம்மன் கோவில் திருவிழா:
திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஒரு கிராம பொதுமக்களை அனுமதிக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்தனர்.