வீரபத்திரர் ராஜகுல பேரவை சார்பாக திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகர மாவட்டம் வீரபத்திரர் ராஜகுல பேரவை சார்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இதில் MBCபட்டியலில் 5% இட பங்கீடு மற்றும் ராஜகுலத்தேவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டி பேரவையின் நிறுவனத் தலைவர் வசந்தன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால்சென்னை நோக்கி மிகத் திறனாக அற வழியில் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்ராஜகுல பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
